ஒரே 'கிளிக்'கில் 3 பிரமாண்ட பாலங்கள்

ஒரே ‘கிளிக்’கில் 3 பிரமாண்ட பாலங்கள்

Update: 2023-09-25 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே உள்ள பிரம்மாண்டமான ரெயில்வே பாலம் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. எனவே அதன் அருகேயே ரூ.435 கோடி நிதியில் 2 கிலோமீட்டர் நீளத்திற்கு புதிய ரெயில் பாலம் கட்டும் பணியானது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் இந்த பணிகள் நிறைவடைய இருக்கின்றன. இந்த இரண்டு ரெயில் பாலங்களை இருபுறமும் அரவணைக்கிறது, பாம்பன் சாலை பாலம். 3 பாலங்களின் மையத்தில் இருந்து கடலோடு பாலங்களின் இருபுறங்களையும் ஒரே கிளிக்கில் எடுத்த படத்தை இங்கே காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்