மதுவிற்ற 3 பேர் கைது

பள்ளிபாளையம் பகுதிகளில் மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-27 18:45 GMT

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் ஓடப்பள்ளி, சமயசங்கிலி, வசந்த நகர் ஆகிய பகுதிகளில் அரசு அனுமதி இன்றி மதுவிற்பனை செய்து கொண்டிருப்பதாக பள்ளிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை ஒட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் உத்தரவின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பள்ளிபாளையத்தை சேர்ந்த கோபி (வயது 23), ஈஸ்வரன் (54), முருகேசன் (57) ஆகியோர் 3 இடங்களில் சாக்குப்பையில் மது பாட்டில்களை வைத்துக்கொண்டு விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை கைது செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து 240 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்