மக்கள் குறைக்கேட்பு கூட்டத்தில் 386 மனுக்கள் பெறப்பட்டன

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைக்கேட்பு கூட்டத்தில் 386 மனுக்கள் பெறப்பட்டன.

Update: 2023-05-29 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைக்கேட்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, மாற்றுத்தினாளிகள் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தம் 386 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். மனுக்களை பெற்ற கலெக்டர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பேருக்கு தையல் எந்திரங்களை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய சேராப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் குமாரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். இதையடுத்து மாற்றுத்திறனாளி வக்கீல்கள் சட்ட புத்தகங்கள் வாங்கி படித்து பயன்பெறும் வகையில் புவனேஸ்வரி என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு, உதவி ஆணையர் (கலால்) ராஜவேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்