பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-09-25 18:09 GMT

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே உள்ள ஊரப்பட்டி பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஊரப்பட்டி அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் அருகே சமையல் கூடத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ஊரப்பட்டியை சேர்ந்த மோகன்குமார் (வயது 36), ரவிக்குமார் (39), சரத்குமார் (28), பாஸ்கர் (34) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்