தமிழகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் இதுவரை 57 செல்போன்கள் பறிமுதல்

தமிழகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் செல்போன்கள் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-20 11:30 GMT

சென்னை,

தமிழகத்தில் சென்னை உள்பட 25 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.

கேரள மாநிலம் விழிஞம் துறைமுகம் அருகே 300 கிலோ ஹெராயின், 5 ஏகே 47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் 25 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, சென்னையில் மண்ணடி, குரோம்பேட்டை, பல்லாவரம், சேலையூர், கேம்ப் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை என மொத்தம் 9 இடங்களிலும், திருச்சியில் 11 இடங்களிலும், திருப்பத்தூரில் ஒரு இடத்திலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் இதுவரை 57 செல்போன்கள், 68 சிம் கார்டுகள், 2 பென் ட்ரைவ், 2 லேப்டாப் மற்றும் 8 வைஃபை மோடம்கள் இலங்கைக்கான பாஸ்போர்ட் உள்ளிவட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்