பிளஸ்-2 தேர்வு எழுதிய 8 கைதிகள் தேர்ச்சி

கடலூர் மத்திய சிறையில் பிளஸ்-2 தேர்வு எழுதிய 8 கைதிகள் தேர்ச்சி

Update: 2023-05-08 18:45 GMT

கடலூர் முதுநகர்

கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்துக்கு அதிகமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 தேர்வை 8 தண்டனை கைதிகள் எழுதினார்கள். இதன் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கடலூர் மத்திய சிறையில் இருந்து தேர்வு எழுதிய 8 தண்டனை கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையறிந்த சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தேர்ச்சி பெற்ற 8 கைதிகளையும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்