மனைவியை தாக்கிய வியாபாரி மீது வழக்கு
தேனியில் மனைவியை தாக்கிய வியாபாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.;
தேனி சமதர்மபுரத்தை சேர்ந்தவர் விஜயசாரதி (வயது 42). ஜவுளி வியாபாரி. இவருடைய மனைவி சவுமியாதேவி (38). இவர்களுக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. விஜயசாரதி மதுபோதையில் தனது மனைவியை அடிக்கடி தாக்கி கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்து அவர் தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விஜயசாரதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.