விருத்தாசலம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது வழக்கு

விருத்தாசலம் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Update: 2023-07-10 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் நேற்று கார்குடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் (வயது 48), சிவகுருநாதன், சுப்ரமணியன் மகன் ராஜேஷ், சம்பத், ரமேஷ் மகன் ராஜேஷ் ஆகியோர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். இவர்கள் 5 பேர் மீதும் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்