பணமோசடியில் ஈடுபட்டவர் கைது

பழைய லாட்டரி சீட்டுகளை விற்று பணமோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-10-08 01:37 IST

மதுரை, 

மதுரை காமராஜர் சாலை சி.எம். நகரை சேர்ந்தவர் வடிவேல் (வயது 27), வேன் டிரைவர். சம்பவத்தன்று இவர் அண்ணாநகர் செக்சன்ஆபீஸ் ரோட்டில் முதியவர் ஒருவரிடம் லாட்டரி சீட்டு வாங்கினார். ஆனால் அவரிடம் வாங்கும் லாட்டரி சீட்டுக்கு பணம் எதுவும் விழவில்லை. இது குறித்து வேறு ஒருவரிடம் கேட்ட போது அது பழைய லாட்டரி சீட்டு என்று தெரிவித்தார். எனவே தன்னிடம் பழைய லாட்டரி சீட்டு விற்று பண மோசடியில் ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வடிவேல் அண்ணாநகர் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அண்ணாநர் இந்திராநகரை சேர்ந்த பாண்டி (60) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 40 பழைய லாட்டரி சீட்டுகள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்