பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பலி

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பரிதாபமாக இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2023-01-11 18:45 GMT

சங்கராபுரம் அருகே எம்.தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 26). இவரது மனைவி சினேகா (21). இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சினேகா மீண்டும் கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவரை உறவினர்கள் பிரசவத்திற்காக கடந்த 9-ந்தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் காலை 7.30 மணிக்கு அவருக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதையடுத்து பிரசவ வார்டு பகுதிக்கு அவரை டாக்டர்கள் அழைத்து சென்றனர். பின்னர் மாலை 3.20 மணிக்கு சினேகாவுக்கு பிரசவ வலி அதிகரித்துள்ளது.

போலீசார் விசாரணை

இந்த நிலையில் வலிப்பு மற்றும் இருதய அடைப்பால் சினேகா இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து செல்வகுமார் கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மனைவி சினேகா சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்