விபத்தில் வாலிபர் பலி

கயத்தாறு அருகேமோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.

Update: 2023-01-16 18:45 GMT

கயத்தாறு:

கடம்பூர் அருகே உள்ள அரியவன்பட்டி முத்துகிருஷ்ணன் மகன் மனோஜ்குமார் (வயது 25). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கல்லத்திகிணறு அருகிலுள்ள சுடலை கோவில் வளைவில் இருந்த அறிவிப்பு பலகையில் திடீரென்று நிலைதடுமாறி மோதியதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்