புதுச்சேரியில் இருந்து 40 டன் குப்பையை ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் குண்டூருக்கு லாரி ஒன்று புறப்பட்டது. திண்டிவனம் தீர்த்தகுளத்தில் வந்தபோது சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் லாரியின் சக்கரம் சிக்கியது. இதையடுத்து கிரேன் எந்திரம் மூலம் லாரி மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.