முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

அரசு மருத்துவ கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-09-01 19:39 GMT

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் 2023-24-ம் ஆண்டு முதலாமாண்டு மாணவர்களின் வருகை மற்றும் ஆலாசனை கூட்டம் மருத்துவமனை டீன் சத்தியபாமா தலைமையில் நடைபெற்றது. கல்லூரி பேராசிரியை சசிரேகா வரவேற்றார். கல்லூரி துணை முதல்வர் ஷர்மிளாதிலகவதி முன்னிலை வகித்தார். ஆலோசனை கூட்டத்தில் நிலைய மருத்துவ அலுவலர் மகேந்திரன், உதவி நிலைய மருத்துவ அலுவலர்கள் முகமதுரபி, தென்றல் உள்பட அனைத்து துறை பேராசிரியர்கள், முதலாமாண்டு மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கல்வியாண்டில் மொத்தம் 100 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளனர். முன்னதாக புதிய மாணவர்களுக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.. தொடர்ந்து முதலாமாண்டு மாணவர்களுக்கு விதிமுறைகள் மீறிய செயல்களோ அல்லது ராகிங் உள்ளிட்டவைகளை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதுபோன்ற சம்பவங்கள் இங்கு நடைபெறாது எனவும், அதை தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.முடிவில் கல்லூரி பேராசிரியர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்