கூடுவாஞ்சேரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

கூடுவாஞ்சேரி அருகே முகநூல் மூலம் பழகிய வாலிபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று தெரிந்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-06-25 17:43 IST

தற்கொலை

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பாண்டூர் அலமேலு மங்கை நகர் பகுதியை சேர்ந்தவர் ஹனி பாக்கியம் (வயது 19). இவர் முகநூல் மூலம் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் காதலித்த வாலிபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று ஹனி பாக்கியத்திற்கு தெரிய வந்தது. இதனால் மனமுடைந்த இளம்பெண் ஹனிபாக்கியம் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து போன ஹனிபாக்கியம் முகநூல் மூலம் பழகி வந்த நபரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்