சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-10-22 22:10 IST

போடி அருகே உள்ள போடிமெட்டு பகுதியை சேர்ந்த முருகன் மகன் கார்த்தி (வயது 29). இவர் 10 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறினாள். அவர்கள் இதுகுறித்து போடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்தியை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்