செஞ்சி,
செஞ்சி தாலுகா நல்லாண்பிள்ளை பெற்றால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் கஞ்சூர் மலைப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக 3 பேரல்களில் வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.