10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு எழுதிய 24 கைதிகளும் தேர்ச்சி

கடலூர் மத்திய சிறையில் 10 மற்றும் 11-ம் வகுப்பு தேர்வு எழுதிய 24 கைதிகளும் தேர்ச்சி

Update: 2023-05-19 18:45 GMT

கடலூர் முதுநகர்

கடலூர் அருகே உள்ள கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு தண்டனை கைதிகள் 13 பேர் 10-ம் வகுப்பு, 11 பேர் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வும் எழுதினார்கள். இதில் தேர்வு எழுதிய 24 கைதிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையடுத்து தேர்ச்சி பெற்ற கைதிகளை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்