அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டம்

மூலக்கரை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடந்தது.

Update: 2023-03-18 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே மூலக்கரை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாஸ்கரன், மூலக்கரை கால்நடை டாக்டர்சரவணக்குமார், உதவி வேளாண்மை அலுவலர் ராஜசேகர், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர் சீனிவாசன் உள்பட அனைத்து துறை அலுவலர்கள், ஊராட்சி செயலாளர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்