அண்ணா தொழிற்சங்கத்தினர் வாயிற் கூட்டம்

கடலூர், காட்டுமன்னார்கோவிலில் 14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து அண்ணா தொழிற்சங்கத்தினர் வாயிற் கூட்டம் நடத்தினர்

Update: 2022-06-08 17:57 GMT

கடலூர்

கடலூர்

14-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை விளக்க வாயிற்கூட்டம் கடலூர் அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகம் முன்பு அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நடந்தது. இதற்கு பேரவை இணை செயலாளர் சூரியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம், வெங்கடேசன், ரத்தினக்குமார், கன்னியப்பன், பணிமனை செயலாளர்கள் பாலமுருகன், நாகராஜன், கலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் நவநீதகண்ணன் வரவேற்றார். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

காட்டுமன்னார்கோவில்

அதேபோல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் பணிமனைகள் சார்பில் 14-வது ஊதிய ஒப்பந்த விளக்க வாயிற் கூட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முருகுமாறன் தலைமை தாங்கினார். காட்டுமன்னார்கோவில் பணிமனை மண்டல துணைத் தலைவர் கஜேந்திரன், சிதம்பரம் பணிமனை-2 செயலாளர் இளங்கோ, சிதம்பரம் பணிமனை- 1 இணைச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மண்டல தலைவர் சந்திரசேகரன் வரவேற்றார். இக் கூட்டத்தில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வாசு முருகையன், எம்.என். சிவக்குமார், நகர செயலாளர் எம்.ஜி.ஆர்.தாசன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் ராஜேந்திரன், சக்திவேல், ராஜமோகன், குமாரசாமி மகேஷ், அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காட்டுமன்னார்கோவில் பணிமனை தொழிற்சங்கபொருளாளர் ராஜு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்