சாராயம் விற்ற வாலிபர் கைது

சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-07-06 17:37 GMT

திருக்கண்ணபுரம் போலீசார் திருமருகல் அருகே ஆதலையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆதலையூர் சுடுகாடு அருகே சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வவ்வாலடி அண்ணாநகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் செந்தில்குமார்(வயது28) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் செந்தில்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்