பள்ளி மாணவி கடத்தல்; பெயிண்டர் போக்சோவில் கைது

பரமத்தியில் பள்ளி மாணவி கடத்திய பெயிண்டரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.;

Update:2023-04-28 00:15 IST

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் புகழேந்தி (வயது 21). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதுடைய மாணவியை ஆசை வார்த்தை கூறி கடந்த 24-ந் தேதி கடத்தி சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பரமத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதன்பேரில் போலீசார் புகழேந்தியிடம் இருந்து மாணவியை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்திய புகழேந்தியை பரமத்தி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்