சேலம் அருகே சிறுமியை திருமணம் செய்த கணவர் உள்பட 2 பேர் கைது

சேலம் அருகே சிறுமியை திருமணம் செய்த கணவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-07-03 01:26 IST

சேலம்,

சேலம் அருகே சேலத்தாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். தொழிலாளி. இவர் கடந்த 2 வருடத்திற்கு முன்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்து உள்ளார். அந்த சிறுமி கணவருடன் வாழ பிடிக்காமல் இருந்து உள்ளார். தகவல் அறிந்த சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் ரஞ்சித்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் சிறுமியை திருமணம் செய்தது உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து ரஞ்சித்குமார் உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்