வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது

தென்காசி அருகே வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-28 18:45 GMT

குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் நேற்று தென்காசி அருகே உள்ள பண்பொழியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பண்பொழியை சேர்ந்த வெள்ளத்துரை (வயது 62) என்பவர் தனது வீட்டில் 769 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கியது தெரியவந்தது. உடனே போலீசார் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்