ஈரோட்டில்மயங்கி விழுந்த முதியவர் சாவு

ஈரோட்டில் மயங்கி விழுந்த முதியவர் இறந்தாா்;

Update:2023-09-28 04:28 IST

ஈரோடு பெருந்துறை ரோடு பழையபாளையம் பெரியகாட்டு தோட்டம் பகுதியில் ஆண் பிணம் கிடப்பதாக சூரம்பட்டி போலீசா

ருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததும், அவரது பெயர் சரவணன் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால் அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவரவில்லை. இதைத்தொடர்ந்து இறந்தவரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்