ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.60 ஆயிரம் எடுத்த ஊழியருக்கு வலைவீச்சு

செக்யூரிட்டி நிறுவனத்தில் ஏ.டி.எம். கார்டை திருடி ரூ.60 ஆயிரம் எடுத்த ஊழியருக்கு போலீசார் வலைவீசி வருகின்றனர்.

Update: 2022-06-16 16:09 GMT

சரவணம்பட்டி


கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் (வயது 71). இவர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் சரவணன் (32) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சிவப்பிரகாசம் அலுவலகத்தில் வைத்திருந்த ஏ.டி.எம். கார்டை சரவணன் திருடி ஏ.டி.எம். மையத்தில் ரூ.60 ஆயிரம் எடுத்துக்கொண்டு, நிறுவனத்தில் இருந்த மோட்டார் சைக்கிளையும் திருடிக்கொண்டு தப்பிச்சென்றார். அவரை சரவணம்பட்டி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்