பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கொள்ளை முயற்சி

ஆலங்குளம் அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் கொள்ளை முயற்சி நடந்தது.;

Update:2022-07-22 21:52 IST

ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே மாறாந்தையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவில் மேற்கூரை உடைக்கும் சத்தம் வந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், மாறாந்தை புறக்காவல் நிலையத்தில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு வருவதற்குள், கொள்ளையர்கள் 5-க்கும் மேற்பட்டோர் சுவர் ஏறி குதித்து தப்பி சென்று விட்டனர். பின்னர் போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது, மேற்கூரை, கதவு உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்