ஆட்டோ டிரைவர் தற்கொலை

பனவடலிசத்திரம் அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-02 19:00 GMT

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே உள்ள கீழ நரிக்குடி ஊரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் செல்வம் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கும், பனவடலிசத்திரம் அருகே உள்ள வலசை பகுதியைச் சேர்ந்த முத்துமாரி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. செல்வத்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த செல்வம் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்