ராணுவ வீரர்களுக்கு, பா.ஜ.க.வினர் அஞ்சலி

கோவில்பட்டியில் புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு, பா.ஜ.க.வினர் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2023-02-15 18:45 GMT

கோவில்பட்டி:

ஜம்மு காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 40 ராணுவ வீரர்கள் பலியானார்கள். இதனை முன்னிட்டு கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு பா.ஜ.க. முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவு மாவட்ட தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் நகர தலைவர் சீனிவாசன், மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜ்குமார், பாலமுருகேசன், மாவட்ட பொது செயலாளர்கள் வேல் ராஜா, விஜயகுமார், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட துணை தலைவர் நீதிப்பாண்டியன் பிரசார பிரிவு மாவட்ட தலைவர் லட்சுமண குமார், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் மாரிமுத்து மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினா்.

Tags:    

மேலும் செய்திகள்