டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

மூன்றடைப்பு அருகே டீக்கடை பூட்டை உடைத்து பணத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.

Update: 2023-10-01 21:31 GMT

நாங்குநேரி:

மூன்றடைப்பு அருகே உள்ள மருதகுளத்தை சேர்ந்த சேகர் மனைவி அன்னலட்சுமி (வயது 51). இவர் மருதகுளம் மெயின் ரோட்டில் உள்ள பள்ளி எதிரே டீக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்த பின்னர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் காலையில் அன்னலட்சுமி தனது கடைக்கு சென்ற போது கடை பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தாா். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்திய போது கடையில் இருந்த ரூ.3500 திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்