வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை, வெள்ளி பொருட்களை கொள்ளை

புகழூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்கநகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2023-02-13 18:50 GMT

வீட்டின் பூட்டு உடைப்பு

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கூகலூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம் (வயது 45). இவர் தற்போது கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சி சுந்தராம்பாள் நகர் 5-வது தெருவில் வசித்து வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று பிரகாசம் சொந்த வேலை நிமித்தமாக வீட்டை பூட்டி விட்டு கூகலூர் சென்று விட்டார். நேற்று முன்தினம் காலை பிரகாசம் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.

தங்க நகை-வெள்ளி கொள்ளை

இதுகுறித்து தகவல் அறிந்த பிரகாசம் தனது வீட்டிற்கு வந்து பீரோவை பார்த்துள்ளார். அப்போது பீரோவை உடைத்து 6 பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசுகள், ரூ.6,500 என மொத்தம் ரூ.2½ லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்