மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம்

மாட்டுவண்டி, குதிரை வண்டி பந்தயம் நடந்தது.

Update: 2023-07-03 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை அடுத்தகுடியில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் திருவிழாவையொட்டி மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. நடுமாடு, பூஞ்சிட்டு, பெரிய மாடு, கரிச்சான் என நான்கு பிரிவுகளாக நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் 66 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

குதிரை வண்டி பந்தயத்தில் 8 வண்டிகள் கலந்து கொண்டன. இப்பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி பந்தய உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 2 நாட்கள் நடைபெற்ற மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயத்தை காண சாலையின் இரு புறங்களிலும் பொதுமக்கள் திரண்டு நின்று ஆரவாரத்துடன் ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அடுத்தகுடி கிராம மக்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்