தடப்பிரச்சினையில் மோதல்: 2 பேர் மீது வழக்கு

தடப்பிரச்சினையில் மோதலில் ஈடுபட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;

Update:2022-07-26 22:47 IST

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூரை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65). அதேபகுதியை சேர்ந்தவர் கோபால் (55). இவர்கள் 2 பேரது விவசாய தோட்டம் அண்ணமார் கோவில் பகுதியில் உள்ளது. இதனால் இவர்களுக்கிடையே தடப்பிரச்சினை இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இவர்கள் 2 பேருக்கும் இடையே தடப்பிரச்சினை தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் சண்முகம் மற்றும் கோபால் மனைவி கமலம் (50) ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து நல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சண்முகம், கோபால் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்