சங்கராபுரம் அருகே முன்விரோத தகராறு; 2 பேர் மீது வழக்கு

சங்கராபுரம் அருகே முன்விரோத தகராறு காரணமாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Update: 2022-07-03 16:05 GMT

சங்கராபுரம். 

சங்கராபுரம் அருகே உள்ள புதுப்பாலப்பட்டு காட்டுக்கொட்டகையை சேர்ந்த கலியன் மகன் மாயவன்(வயது 44). இவருக்கும் பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்த மலையான் மகன் கோவிந்தன்(46) என்பருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று இந்த பிரச்சினை தொடர்பான விசாரணைக்கு சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது கோவிந்தனும், இவரது சகோதரர் ஜெயமுருகனும் மாயவனை தாக்கி, அவரது செல்போனை உடைத்தும், கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவிந்தன், ஜெயமுருகன் ஆகியோர் மீது சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்