சந்தானராமர் கோவிலில் விடையாற்றி உற்சவம்

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் விடையாற்றி உற்சவம்

Update: 2023-04-09 18:45 GMT

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ராமநவமி விழா கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் தினமும் சாமி, தாயார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தினமும் சாமி வீதிஉலா நடைபெற்றது. அதையடுத்து நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு சீதா, லெட்சுமணர், அனுமன் சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்