விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு சாந்தன் கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சாந்தன் தன்னை விடுதலை செய்யக்கோரி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2022-06-08 15:16 GMT

சென்னை,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை செய்யக்கோரி சிறைத்துறை மூலம் சாந்தன் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதி உள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேல் வேலூர் மத்திய சிறையில் உள்ளார் சாந்தன்.

சமீபத்தில் பேரறிவாளன் விடுதலையான நிலையில் தன்னையும் விடுதலை செய்யக்கோரி வேலூர் சிறையில் இருந்து கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்