அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் இறந்து கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை

பரமக்குடி அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் இறந்து கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2022-07-09 14:54 GMT

பரமக்குடி, 

பரமக்குடி அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் இறந்து கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இறந்து கிடந்த குழந்தை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில், கழிவறையை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர் ேநற்று காலை சென்றுள்ளார்.சுத்தம் செய்து கொண்டு இருந்த போது, அங்கு ஓரிடத்தில் பச்சிளம் ஆண் குழந்தையின் உடல் கிடந்தது.அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர், இதுகுறித்து ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் முத்தரசனிடம் கூறியுள்ளார்.

உடனே அவர் அங்கு சென்று பார்வையிட்டு, பரமக்குடி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த ஆண் குழந்தை உடலை கைப்பற்றினர்.

விசாரணை

இதுகுறித்து டாக்டர் முத்தரசன் கொடுத்த புகாரின் பேரில் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.முதற்கட்ட விசாரணையில், 7 மாத கர்ப்பத்திலேயே பிறந்த குழந்தை என்பது தெரியவந்தது. அந்த குழந்தை யாருடையது? எப்படி இறந்தது? என்பது குறித்து ேபாலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்