ரூ.5¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.5¾ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.;
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. கடந்த வாரம் 10 ஆயிரத்து 112 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.85-க்கும், குறைந்தபட்சமாக ரூ.57.89-க்கும், சராசரியாக ரூ.77.90-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 72 ஆயிரத்து 344-க்கு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 448 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.82.69-க்கும், குறைந்தபட்சமாக ரூ.50.10-க்கும், சராசரியாக ரூ.80.25-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 79 ஆயிரத்து 658-க்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.