தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.18 லட்சத்து 18 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.18 லட்சத்து 18 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

Update: 2022-11-24 18:45 GMT

தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் பட்டுக்கூடுகள் ஏல அங்காடி செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று 2,660 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.809-க்கும், குறைந்தபட்சமாக ரூ.588-க்கும், சராசரியாக ரூ.683.59-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.18 லட்சத்து 18 ஆயிரத்து 988-க்கு பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்