காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை

ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-10-11 19:30 GMT

மத்திகிரி:-

ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி மாணவர்

ஓசூர் மாநகராட்சி அன்னைநகர் பகுதியை சேர்ந்தவர் சகாய பார்த்திபன். இவருடைய மகன் டேட்ரன் பார்த்திபன் (வயது 19). இவர் தனியார் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த மாணவனின் பெற்றோர், டேட்ரன் பார்த்திபனை கண்டித்துள்ளனர். இதில் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

தற்கொலை

சம்பவத்தன்று இரவு டேட்ரன் பார்த்திபன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த மத்திகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்த மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தினர். காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்