பள்ளத்தில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு

பள்ளத்தில் தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு

Update: 2023-05-26 18:45 GMT

குழித்துறை:

தேங்காப்பட்டணம் அருகே அம்சி குதிரால்விளையை சேர்ந்தவர் தாசையன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இவர் நேற்று முன்தினம் மார்த்தாண்டம் அருகே விரிகோடு அம்புலிவிளை பகுதியில் ஒரு வீட்டில் காம்பவுண்டு சுவர் கட்டுவதற்காக சக பணியாளர்களுடன் சென்றார். அதன்படி அங்கு காம்பவுண்டு சுவர் கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மதியம் தாசையன் ஒரு சிமெண்ட்டு கல்லை தூக்கி சுவரின் மீது வைத்தார். அப்போது திடீரென தாசையன் நிலைதடுமாறி அருகில் இருந்த 8 அடி பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார். இதைகண்ட சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் படுகாயமடைந்த தாசையனை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே தாசையன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாசையனின் மகள் ஆனந்தி (33) மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்