கூடலூர் நகர்மன்ற கூட்டம்

கூடலூரில் நகர்மன்ற கூட்டம் நடந்தது

Update: 2022-08-12 14:39 GMT

கூடலூர் நகராட்சியில் நகர்மன்ற கூட்டம் தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமையில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையாளர். காஞ்சனா, பொறியாளர் வரலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் உள்பட அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் தேவர் சிலை மற்றும் இந்து நடுநிலைப்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே பாலம் கட்டுதல், சுல்ல கரையில் இருந்து வடக்கு போலீஸ் நிலையம் வரை மூடியுடன் கூடிய கழிவுநீர் வடிகால் வசதி செய்தல், கருணாநிதி காலனி மற்றும் காந்தி கிராமம் பகுதியில் உள்ள கழிப்பறை கட்டிடங்களை சீரமைப்பு பணிகள் செய்தல் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகராட்சி சார்பில் அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கு தலா 50 தேசிய கொடிகள் வழங்கப்பட்டது. கூட்ட முடிவில் நகராட்சி மேலாளர் ஜெயந்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்