காதல் கணவர் இறந்ததால் விஷம் குடித்த இளம்பெண் சாவு

Update: 2023-02-02 18:45 GMT

தர்மபுரி:

கிருஷ்ணாபுரம் அருகே உள்ள சீராம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மனைவி அட்சயா (வயது 27). இவர்கள் 2 பேரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பெயிண்டரான முனிராஜ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். கணவர் இறந்ததால் மன வேதனையில் இருந்த அட்சயா கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று அட்சயா வீடு திரும்பினார். இந்தநிலையில் அவருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மயங்கி விழுந்தார். அவரை குடும்பத்தினர் மீண்டும் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக கிருஷ்ணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்