முதியவருக்கு கொலை மிரட்டல்

திருவெண்ணெய்நல்லூர் அருகே முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-08-13 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள துலங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் உலகநாதன்(வயது 70). இவர் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் மேஸ்திரியாக உள்ளார். அதே ஊரை சேர்ந்த ஏழுமலை மகன் குப்புசாமி(45). இவர் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் தனது பெயரை சேர்க்கவில்லை எனக் கூறி உலகநாதனை திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின்பேரில் குப்புசாமி மீது திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்