ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update:2022-10-24 00:15 IST

தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார்.சங்க மாவட்ட செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, மாவட்ட துணை செயலாளர் பவுல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக மீனவர்களை இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியது கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மயிலாடுதுறை ஒன்றிய செயலாளர் குமரேசன், குத்தாலம் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்