600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

தலைஞாயிறு அருகே அவரிக்காடு பகுதியில் 600 லிடடர் சாராய ஊறலை ேபாலீசார் அழித்தனர். மேலும் சாராயம் விற்ற 2 பேரை கைது செய்தனர்.

Update: 2023-03-18 18:45 GMT

வாய்மேடு:

தலைஞாயிறு அருகே அவரிக்காடு பகுதியில் 600 லிடடர் சாராய ஊறலை ேபாலீசார் அழித்தனர். மேலும் சாராயம் விற்ற 2 பேரை கைது செய்தனர்.

ரகசிய தகவல்

தலைஞாயிறு அருகே வண்டல் பகுதியில் சாராயம் விற்பனை நடப்பதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் வேதாரண்யம் தனிப்படை போலீசார் மற்றும் தலைஞாயிறு போலீசார் மேற்கொண்ட சோதனையில் வண்டல் பாலத்தில் சாராயம் விற்ற அவரிக் காடு பகுதியைச் சேர்ந்த ரவி (வயது46), அண்ணாதுரை மகன் மணிகண்டன் (32) ஆகிய 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

விசாரணையில் அவர்கள் 2 பேரும் அவரிக்காடு பகுதியில் 600 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அங்கு பேரலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்தனர். பின்னர் அங்கேயே சாராய ஊறலை தரையில் ஊற்றி அழித்தனர்.

2 பேர் கைது

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவி, மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்