மோட்டார்சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி பலி

மோட்டார்சைக்கிள் மோதி கூலித்தொழிலாளி பலி

Update: 2022-09-25 18:45 GMT

மோகனூர்:

மோகனூர் அடுத்த வளையப்பட்டி ஊராட்சி குரும்பபட்டியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு வேலைக்கு சென்று விட்டு வளையப்பட்டியில் இருந்து குரும்பபட்டி செல்லும் வழியில் தனியார் கோழிப்பண்ணை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக பின்னால் மோட்டார்சைக்கிளில் வந்தவர் கவனக்குறைவாக நடந்து சென்ற கந்தசாமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக தெரிகிறது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் அடைந்த கந்தசாமியை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கந்தசாமி இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து கந்தசாமியின் மகன் சவுந்தரராஜன் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்