வாகனம் மோதி லாரி டிரைவர் பலி

Update: 2023-01-14 18:45 GMT

குருபரப்பள்ளி:

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் ராமநாதன் (வயது 47). லாரி டிரைவர். இவர் கடந்த 12-ந் தேதி ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ஜிஞ்சுப்பள்ளி அருகே நடந்த சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராமநாதன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்