பாப்பாரப்பட்டி அருகேபிறந்து 3 நாட்களே ஆன பெண் சிசு சாவு

Update: 2023-02-12 19:00 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள வள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 37). இவரது மனைவி பிரபாவதி (26). இவர்களுக்கு 6 மற்றும் 3 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பிரபாவதிக்கு பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 9-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் குழந்தையுடன் தனது வீட்டுக்கு பிரபாவதி சென்றுவிட்டார்.இதையடுத்து நேற்று முன்தினம் இரவு பெண் சிசுவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக கூறி தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பெண் சிசுவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பெண் சிசுவின் திடீர் சாவு குறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்