2,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கல்வராயன்மலையில் 2,200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Update: 2023-06-11 18:45 GMT

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை தும்பரம்பட்டு வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக மர்ம நபர்கள் சாராய ஊறலை பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்க பிிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் தும்பரம்பட்டு வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வடக்கு மற்றும் தெற்கு ஓடை பகுதியில் பேரல்களில் 2,200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை தரையில் கொட்டி அழித்தனர். இது குறித்து 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்