இடப்பிரச்சினையில் தகராறு; டிரைவர் கைது

இடப்பிரச்சினையில் தகராறில் ஈடுபட்ட டிரைவர் கைது செய்யப்பட்டார்.;

Update:2023-07-07 01:30 IST

இட்டமொழி:

வடக்கு விஜயநாராயணம் அருகே உள்ள பெரியநாடார்குடியிருப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 67), நிலபுரோக்கர். அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (32), லோடு ஆட்டோ டிரைவர். இவர்கள் 2 பேருக்கும் இடப்பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த நிலையில் இதுசம்பந்தமாக ஸ்டாலின், பொன்ராஜ் வீட்டுக்கு சென்று அவரை அவதூறாக பேசி அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பொன்ராஜ் வடக்கு விஜயநாராயணம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நாககுமாரி, சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, ஸ்டாலினை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்